தமிழ்நாடு கட்டட மனை விற்பனை மேல்முறையீட்டு ஆணையம்

கண்ணோட்டம்

கட்டடம் மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 2016னை இந்திய அரசு அறிவிக்கை செய்தது. தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் நெறிப்படுத்துதல்) விதிகள் 2017ஐ தமிழ்நாடு அரசு ஆணை (நிலை) எண். 112 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள் 22.06.2017 மூலம் வெளியிட்டது. ஒழுங்குமுறை குழுமம் மற்றும் தீர்ப்பாயரின் முடிவுகள் அல்லது உத்தரவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்கள் மேல் செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரிக்க தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தினை அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசாணை நிலை எண்.103 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை நாள் 24.07.2018 மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மேல்முறையீட்டையும் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

குழுமம் அல்லது தீர்ப்பாயரின் உத்தரவுகள் முடிவுகள் அல்லது ஆணைகளினால் பாதிக்கப்பட்ட எவரும் இச்சட்டத்தின்படி இவற்றின் அதிகார வரம்புள்ள மேல் முறையீட்டு ஆணையத்திடம் மேல் முறையிடலாம். இச்சட்டத்தின் உட்பிரிவு (1) பிரிவு 44ன் படி செய்யப்படும் ஒவ்வொரு மேல்முறையீட்டுக்கும் இணையம் மூலமாக அதன் கட்டணம் ரூ.2,000 /- செலுத்த வேண்டும். ஒவ்வொரு மேல் முறையீடும் படிவம் 'L' மூலம் கீழ்க்கண்ட ஆவணங்களுடன்

அ) மேல்முறையீடு செய்யப்படும் உத்தரவின் சான்றளிக்கப்பட்ட உண்மை நகல்

ஆ) மேல்முறையீட்டாளரால் நம்பப்பட்டதும், மேல் முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான ஆவணங்களின் நகல்

இ) ஆவணங்களின் குறியீடு